• Jun 07 2025

முதலிரவுக்காக அறைக்கதவை திறந்த தங்கமயிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ப்ரோமோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்று ஒரு வழியாக சரவணன் - தங்கமயில் திருமணம் நடந்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் முதலிரவு அறைக்குள் செல்வதற்காக தங்கமயில் கதவை திறந்த போது அங்கே கண்ட காட்சியை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.

சரவணன் மற்றும் தங்கமயில் ஆகியோரின் முதலிரவுக்காக அறையை செந்தில், கதிர் மற்றும் அவர்களது   மாமா ஆகிய மூவரும்  பூக்களால் அலங்கரிக்கும் காட்சிகள் உள்ளன. அப்போது ராஜி மற்றும் கதிர் பூக்களை போடும் போது ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ரொமான்ஸில் ஈடுபடுகின்றனர். அப்போது தற்செயலாக அங்கே வரும் செந்தில் மற்றும் மீனா ’என்ன கொழுந்தனாரே ரொமான்ஸா’ என்று கிண்டலாக கேட்கிறார்.

இதனை அடுத்து ராஜி வெட்கத்துடன் வெளியே ஓடி விடுகிறார், கதிரும் வெளியே சென்று விடுகிறார். அதன் பின்னர் செந்தில் மற்றும் மீனா ஆகிய இருவரும் ’நாம ரெண்டு பேரும் ரொமான்ஸ் செய்யலாமா’ என்று கையை பிடித்துக் கொண்டு சுற்றி கொண்டிருக்கின்றனர். அப்போது ’நீ உள்ள போம்மா’ என்று தங்கமயிலை கோமதி முதலிரவு அறைக்கு அனுப்பும்போது செந்தில் மற்றும் மீனா இருவரும் கையை கோர்த்துக் கொண்டு கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்ததும் கோமதி ’ஏய் மீனா, இங்கே என்ன பண்ணிட்டு இருக்க’ என்று கேட்க இருவரும் வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொள்ளும் காட்சிகளுடன் ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் அடுத்த சில எபிசோடுகள் காமெடி ஆகவும் ஜாலியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement