இன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி மற்றும் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் 'குட் பேட் அக்லி' படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அஜித்தின் மனைவி மற்றும் முன்னணி நடிகையுமான ஷாலினி தனது மகளுடன் சேர்ந்து கணவர் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தை பார்ப்பதற்கு ரோகிணி திரையரங்கிற்கு ஆர்வமுடன் சென்றுள்ள தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அஜித் மற்றும் ஷாலினி ஜோடி திரை உலகைத் தாண்டி நிஜவாழ்க்கையிலும் உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது. ஷாலினி, தனது கணவர் நடித்துள்ள ஒவ்வொரு படத்திற்கும் அளிக்கும் ஆதரவைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென கமெண்ட்ஸில் தெரிவித்துள்ளனர்.
ரோகிணி திரையரங்கில் ஷாலினி மகளுடன் சென்றதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றனர். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் படத்தைப் பார்ப்பதற்கு திரையங்கிற்குச் சென்றுள்ளனர். பலரும் தங்கள் தொலைபேசியில் இந்த அழகான தருணங்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே ரசிகர்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. அஜித்தின் சிறப்பான நடிப்பு மற்றும் ஸ்டைலான காட்சிகள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வெற்றியை சிறப்பிக்கும் முகமாக ஷாலினி திரையரங்கிற்கு நேரில் வந்து பார்வையிட்டது காணப்படுகின்றது.
Listen News!