• Apr 27 2025

ஈஸ்வரிக்கு ஆப்பு வைத்த கோபி.. டாக்டரிடம் மன்றாடிய வேடிக்கை! ஷாக்கான ராதிகா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகா காரில் இருக்க, என்ன வாங்கி தர, யூஸ் வாங்கி தரவா என கேட்க, அவர் முதலில் மெடிக்கல் ஷாப் போங்க என சொல்ல, அவர் போன கடை எல்லாம் பூட்டி. இறுதியாக ஒரு கடைக்கு சென்று பிரக்னன்சி ஹிட் வாங்கி செல்கிறார்.

அங்கு செக் பண்ணி பார்க்க அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி ஆகிறது. கோபியிடம் சொல்ல, முதலில் சந்தோசப்படுகிறார். அதன் பின் டென்சன் ஆகிறார். 


ராதிகா டாக்டரிடம் சென்று வருவோம், ஆனா கீழ உங்க அம்மா, அப்பா கேட்டா சமாளிங்க என சொல்ல, அவர்கள் கீழே வர, தாத்தா வாரார் பாருங்க என கோபியை பார்த்து ராமமூர்த்தி சொல்லுகிறார். மீண்டும் மீண்டும் தாத்தா என சொல்ல, நாங்க ஹாஸ்ப்பிட்டல் போய் வந்து கதைக்கிறம் என சொல்லி கிளம்புகிறார்.

அதன்பின், போகும் போது தனது கிச்சனை பார்த்துக் கொள்ளுமாறு ஈஸ்வரியிடம் சொல்ல, முதலில் முடியாது என்று சொல்லி, அதன்பின் சரி என கிளம்புகிறார்.

டாக்டரிடம் சென்ற கோபிக்கு, வாழ்த்துக்கள் என சொல்லி உங்க மனைவி கர்ப்பமாக இருக்கா என சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார்.


Advertisement

Advertisement