• May 31 2025

ஏமாற்றம் ,துரோகம் 15 வருடத்தில் தெரிந்து கொண்டேன்.!நடிகர் விமலின் உணர்ச்சி பேச்சு!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தனது நடிப்பில் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் விமல் . இவர் ஆரம்பத்தில் பல துணை வேடங்களில் நடித்த பின்பு ஹீரோவாக அறிமுகமாகினார். "களவாணி" திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் சினிமாத்துறைக்கு திருப்புமுனையாக இருந்தது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது பல விடயங்கள் பற்றி கூறியுள்ளார்.


நேர்காணலில் நிகழ்ச்சி தொகுப்பாளரால் சில கேள்விகள் கேட்கப்பட்டன அதற்கு பதில் விமல் அளித்துள்ளார். உங்களை சில நடிகர்கள் இன்ஸ்பிரேஷனா எடுத்து கொள்கின்றார்கள்  உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு "எனக்கு அப்போதும்  யாரும் இல்லை இப்போதும்  யாரும் இல்லை , நான் ஒரு நடிகனாக வரவேண்டும் அதுதான் என் மனதில் இருந்தது ,சினிமா வாய்ப்பு தேடும் போதுதான் " கில்லி , கிரீடம்" போன்ற திரைப்படங்களில் நடித்தேன். படத்தினை தியேட்டரில்  பார்த்த போது  என் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது மாதிரி இருந்தது அதனால் இன்னும் நன்றாக  நடிக்க வேண்டும் என முடிவு எடுத்தேன் " எனக் கூறினார்.


எப்போது உங்களுடைய படத்தில் "கலக்ஸி ஸ்டார்" என்ற பெயர் எப்போது வரும் என்ற கேள்விக்கு "படத்தில்  யாரோ போட்டு புரளியை கிளப்பி விட்டார்கள். "கலக்ஸி ஸ்டார்" என்று என்னை ஓட்டுறாங்க என நினைக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உங்களை பற்றி கடைசியாக நீங்க படித்த வதந்தி என்ன என்று சொல்லுங்கள் என்ற கேள்விக்கு "முன்னாடி வதந்திகள் வந்தது தற்போது வருவது  கிடையாது, முன்னாடி "லேட்டா வருவார் ,கதை கேட்கும் போது தூங்கிவிடுவார் , குடிச்சிட்டு வந்து நடிப்பார் என 10 வருடங்களுக்கு முன்பு வந்த வதந்திகள் தற்போது வருவது கிடையாது. 



மேலும் நீங்கள் நிறைய ஹீரோயினி கூட நடித்து இருக்கின்றீர்கள் பிடித்த ஹீரோயினி யார்? என்ற கேள்விக்கு "நான் நடித்த எல்லா ஹீரோயினி கூடாவும் நன்றாக நடித்தேன் " எனக் கூறினார். மேலும் உங்களுடைய மனைவி எந்த ஹீரோயினி கூட நல்லா இருந்தது என்று சொல்லுவாங்க என்ற கேள்விக்கு "அவங்க இதற்குள்ளே வந்தது கிடையாது படம் பார்த்த நல்ல இருக்கு இல்லா,  சும்மா கட்டி பிடித்தா , முத்தம் கொடுத்தா  ஒரு பார்வை ஒன்று பார்ப்பா அவ்வளவு தான் எனக் கூறியதுடன் "இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு" என்ற படத்தினை பார்த்து விட்டு துப்பி விட்டா" எனக்கு நடிக்கும் போது தெரியவில்லை திரையரங்கில் பார்க்கும் போது தான் இப்படி நடித்தேன் என்று தெரிந்தது. இனிமேல் இது மாதிரி படம் நடிக்க கூடாது என முடிவு செய்ததாகவும் கூறியிருந்தார். 


உங்க கூட இருந்தவங்க எல்லோரும் வளர்ந்து வரும் போது உங்களுக்கு எப்படி இருக்கு? என்ற கேள்விக்கு "நம்ம  கூட இருந்தவங்க வளர்ந்தால் நாம வளருவோம், நாம வளர்ந்தால் நம்ம கூட இருந்தவங்கள வளர்த்து விடுவோம் " எனக் கூறினார். மேலும் கூறுகையில் நீங்களே கூறினீர்கள் ஏமாற்றம் ,துரோகம்  என எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் என்று  இப்போது உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு "நான் கதை கேட்கும் போது அவர்கள் இந்த படத்தினை எடுப்பார்களா , இல்லையா என தெரிந்து விடும். இந்த அனுபவத்தை 15 வருடத்தில் தெரிந்து கொண்டேன் என கூறினார். 








Advertisement

Advertisement