சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா அருணைப் பாத்து மாமா எங்க குடும்பத்து மேல ரொம்பவே அக்கறையா இருக்கிறாரு அவர் சொல்லுறதை தான் நான் கேட்பேன் என்கிறார். மேலும் நான் உங்களை மறந்திடுறேன் நீங்களும் மறந்திடுங்க என்று அருணைப் பாத்துச் சொல்லுறார். அதைக் கேட்ட அருண் உன்னால என்னை மறக்க முடியுமா என்று கேக்கிறார். சீதா அதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அழுதுகொண்டு அங்கிருந்து கிளம்புறார்.
அதனை அடுத்து முத்து சீதாவுக்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். மறுநாள் விஜயா வீட்டுக்கு மலேசியா மாமா வந்து நிக்கிறதைப் பாத்த முத்து எல்லாரும் ஓடி வாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி இவர் ஏன் இப்ப வந்து நிக்கிறார் என்று ஜோசிக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜயா வந்து இவர் மலேசியா மாமா எல்லாம் ஒன்னும் இல்ல டுபாக்கர் மாமா என்று சொல்லுறார்.
பின் நீங்க எதுக்கு இங்க வந்தனீங்க என்று கேக்கிறார். மேலும் ரோகிணியைப் பாத்து நீ தான் வரச்சொன்னியா என்கிறார். அதனை அடுத்து அண்ணாமலை கடந்து போன கசப்பான சம்பவங்களை மறந்து போறது நல்லது என விஜயாவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா அந்த விஷயம் ஒன்னும் கடந்து போகல அது இங்க தேங்கியெல்லோ நிக்குது என்கிறார்.
அதனை அடுத்து ரவியும் இவர் பண்ண தப்பிற்கு பொலீஸிட்ட பிடிச்சுக் கொடுத்திருக்கணும் என்று சொல்லுறார். பின் மலேசியா மாமா அண்ணாமலையைப் பாத்து நான் உங்க வீட்ட வந்து மன்னிப்பு கேட்டேன் என்ற விஷயத்தை பரசு கிட்ட சொல்லிவிடுங்க என்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை சரி நான் பரசு கிட்ட பேசுறேன் இனிமேல் இந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!