சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து என்ன நடந்தாலும் சரி சீதாவுக்கு ஒரு நல்ல பெடியனை மாப்பிள்ளையாக பாக்கலாம் என்று தன்ர friendக்கு சொல்லுறார். அதனை அடுத்து சத்தியா மீனாவைப் பாத்து சீதா இனிமேல் கல்யாணமே வேணாம் என்று சொன்னதாகச் சொல்லுறார். இதைக் கேட்ட முத்து இப்பதான் சீதா ரொம்ப நல்ல முடிவெடுத்திருக்கிறாள் என்கிறார். பின் சத்தியா மாமா சீதாவுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியும் அவள் ரொம்பவே புத்திசாலி என்று சொல்லுறார்.
மேலும் சத்தியா மாமா அந்தப் பொலீஸ் நல்லவர் என்று சீதா நினைக்கிறாள் போல அதுதான் அவரை லவ் பண்ணியிருப்பாள் என்கிறார். இதனை அடுத்து நீங்க மனசு வைச்சால் அவள் நினைக்கிறது நடக்கும் என்கிறார் சத்தியா. அதைக் கேட்ட முத்து நானும் அவள் நல்லா இருக்கோணும் என்று தான் ஆசைப்படுறேன் ஆனால் அருண் நல்லவன் கிடையாது என்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ருதி அண்ணாநகரில ஹோட்டல் திறக்கலாம் என்று ரவியைப் பாத்துச் சொல்லுறார். அதைக் கேட்ட ரவி இப்ப போய் சாப்பிடுவோம் ரெஸ்டாரெண்ட் பற்றி பிறகு ஜோசிப்போம் என்கிறார். மறுநாள் காலையில மீனா முத்துவைப் பாத்து முதல்ல சீதாவுக்கு மாப்பிள்ளை பாக்கிறதை நிப்பாட்டுங்க என்று சொல்லுறார். அதுக்கு முத்து மாப்பிள்ளை பாக்கிறதால இப்ப என்ன நடக்கப்போகுது என்று கேக்கிறார்.
அதனை அடுத்து ரவி முத்துவைப் பாத்து ஸ்ருதி நான் சொல்லுற எதையும் கேட்கிறாள் இல்ல என்றதுடன், எப்புடி ஸ்ருதி வீட்ட இருந்து வாற பணத்தில ஹோட்டல் திறக்கிறது என்கிறார். அதைக் கேட்ட முத்து இந்த விஷயத்தில நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறேன் என்று ரவிகிட்ட சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!