தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக மாறியுள்ளார் நிதி அகர்வால். ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் நிதி, சமீபத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெரும் எதிர்பார்ப்புள்ள தெலுங்குப் படம் ஹரிஹர வீரமல்லுவில் நடித்திருக்கின்றார். இவர் தமிழ் திரைப்படமான ‘கலகத்தலைவன்’ மூலமாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நேர்காணலில், தனது சினிமா பயணத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து நிதி அகர்வால் உருக்கமாகப் பேசியுள்ளார். அதன்போது, "நான் 'கலகத்தலைவன்' படத்தில் நடிக்கும்போது உதயநிதி ஸ்டாலின் சார் துணை முதல்வராக இல்லை. அதேபோல, 'ஹரிஹர வீரமல்லு' படத்தில் நடிக்கும் போது பவன் கல்யாண் சார் துணை முதல்வராக இல்லை. எனக்கு அவர்கள் இருவரையும் நடிப்பதன் மூலமே தெரியும். அவர்கள் அரசியலாளர்கள் என்பதை பிறகு தான் உணர்ந்தேன்!" என்றார்.
தொடர்ந்து நிதி தமிழ் சினிமாவின் ஆரம்ப அனுபவங்களைப் பற்றியும் ஞாபகம் செய்திருந்தார். "நான் தமிழில் நடித்த முதல் படம் 'பூமி'. அதில் ஜெயம் ரவியுடன் நடித்தேன். அவர் மிகவும் நல்ல மனிதர். என்னை பெரிதும் உற்சாகப்படுத்தி நடிக்கச் செய்தவர்." எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, "சிம்பு ஒரு talented person. அவருடைய dedication எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஒரு காட்சிக்குள் எத்தனை expressions வரலாம், எப்படி feel பண்ணி நடிக்கலாம் என அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்." என்றார் நிதி அகர்வால்.
நிதி அகர்வால் தற்போது தெலுங்கு, தமிழ் என இருமொழித் துறையிலும் வெற்றிகரமாக நடித்து வருகின்றார். அவரது நடிப்பும் நேர்மையான பார்வையும், அவர் கூறும் கருத்துக்களும், ரசிகர்களிடையே அவரை ஒரு genuine பிரமுகராக மாற்றியுள்ளது.
Listen News!