தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குநர் "ராம் " இவர் பல திரைப்படங்களில் இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . தற்போது ‘பறந்து போ’, இன்று ஜூலை 4ஆம் திகதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ஒரு ரசிகனாக மட்டுமல்ல, இயக்குநரின் வாழ்க்கைத் தத்துவங்களில் தாக்கம் பெற்றவராகவும், இந்த பட ரிலீஸ் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜின் உருக்கமாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் . அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
அந்த பதிவில் தற்போது யூ.எஸ்-இல் இருப்பதால் ரிலீஸ் கொண்டாட்டத்தில் நேரில் கலந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும் சென்னையில இருந்து நிறைய பேர் அழைத்து, படம் ரிலீஸானவுடன் ‘பயங்கரமா எஞ்சாய் பண்ணோம்’ன்னு சொல்றாங்க. நல்ல படம் பார்த்தோம் என்று நிறைய போன்கள் வந்துகொண்டே இருக்கு.
அந்த ஒவ்வொரு அழைப்பும் எனக்கு மனநிறைவைக் கொடுக்குது” என்று கூறினார் நடிகர். “நான் இப்போ அமெரிக்காவில் இருக்கேன். ஆனாலும், நாளைக்கு இங்க இருக்கிற தமிழ் ரசிகர்களுடன் சேர்ந்து இந்த படத்தை பார்க்க போறேன். அந்த சந்தோஷத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியதது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கு,” என்று உரிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
‘பறந்து போ’ படம் சினிமாவை ஒரு உன்னதமான நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சி. உணர்வுகள், நம்பிக்கை, வாழ்க்கையின் சாமானியங்கள் இவை அனைத்தையும் அன்புடன் சொல்லும் ஒரு கதை. ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் அடுத்த முக்கிய கட்டம். என பலர் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .
Listen News!