தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பிரியா மணி. சரியான தேர்வுகளும், நடிப்புத் திறமையும், அழகும் ஒரே நேரத்தில் பேணி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து ஒலித்து வரும் இவரின் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெறித்தனமான வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் பிரியா மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தான் இப்போது ட்ரெண்டாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில், இவர் ப்ரவுன் கலரில் ஸ்டைலான உடை அணிந்து, அழகும் கவர்ச்சியும் கலந்த தோற்றத்துடன் பளிச்சென உள்ளார். அவருடைய மெக்கப், ஹேர் ஸ்டைல் மற்றும் அவுட் ஃபிட்டின் ஒட்டுமொத்த மாறுபாடும் பிரியா மணியை வித்தியாசமாக காட்டியுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வந்தவுடன், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “பிரியா மணியை இப்டி ஒரு லுக்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்ல!” என கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். வைரலான போட்டோஸ் இதோ..!
Listen News!