இயக்குநராக இருந்து முன்னணி நடிகராக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார். விடுதலை 2 படத்தின் மாபெரும் வசூலை தொடர்ந்து இவர் அடுத்து பூரி ஜெகநாத் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தில் தபு மற்றும் சாண்டல் வுட் நடிகர் விஜயகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது ஆனால் படத்தின் கதாநாயகி குறித்து எதுவித தகவலும் வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது ஹீரோயின் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேயிடம் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் படமாக தயாரிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!