• Apr 27 2025

விளம்பரத்தால் சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர்கள்..! அதிருப்தியடைந்த ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா உலகம் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பிரபலமான நடிகர்கள் சில நேரங்களில் தவறான விளம்பரங்களில் கலந்து கொள்ளும் போது அது அவர்களுக்கு சட்டப்பிரச்சனையாக மாறுகின்றது. தற்போது, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சூத்தாட்ட விளம்பரத்தைச் செய்ததால் வழக்கில் சிக்கியுள்ளனர்.


பெரும்பாலான பிரபலங்கள் தங்களது புகழை வைத்துக் கொண்டு விளம்பரங்களில் பணம் சம்பாதிக்கிறார்கள். எனினும், அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை அவர்கள் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இருப்பது மக்களின் எதிர்ப்பை ஏற்படுத்துகின்றது. இந்த விவகாரம் வெளியானதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் தேவரகொண்டா மீது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும் பணம் சம்பாதிக்க மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் விடுவீர்களா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிவருகின்றனர். இந்தக் கேள்விகளுக்கு கைரபாத் காவல்துறையினர் விரைவில் பதில் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விவகாரம், எதிர்காலத்தில் நடிகர்கள் எந்த விளம்பரத்தையும் தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் அனைவரும் இப்பிரச்சனையில் இருந்து விரைவில் அவர்கள் மீளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

Advertisement

Advertisement