• Apr 27 2025

பார்லர் திறப்பு விழாவில் நகைச்சுவை செய்த ஜெயம் ரவி! சமூகவலைத்தளத்தில் வைரலான தகவல்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவி, சமீபத்தில் ஒரு பியூட்டி பார்லர் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசியது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிகழ்வில் ஜெயம் ரவி, “நான் ஒரு கெஸ்ட் ஆக வந்து இருக்கல, ஒரு அண்ணனாக வந்திருக்கேன்” என்று கூறினார். அவரது இந்த சொற்கள் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டன. நடிகராக மட்டுமல்லாமல், அவர் மக்களின் அன்புக்குரியவராகவும், ஒட்டுமொத்த திரைத்துறைக்கே சகோதரனாகவும் திகழ்கிறார் என்பதை இந்த உரையால் நிரூபித்தார்.


மேலும்  ஜெயம் ரவி, தனது புதிய குடும்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் போது “மாமியார்.. மருமகள ஒண்ணா பாக்குறதே கஷ்டம்” என்று நகைச்சுவையாகக் கூறி, அனைவரையும் ரசிக்க வைத்தார். இது ரசிகர்களிடையே மேலும் சிரிப்பை ஏற்படுத்தியது.

பார்லர் திறப்பு விழாவில், ஜெயம் ரவி தன்னுடைய முதல் பார்லர் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். “நான் பார்லருக்கு முதல் முறையாக என் முதல் படத்திற்காக தான் போனேன்” என்று அவர் கூறினார். இது அவரது திரைப்பயணத்தின் ஆரம்ப கட்ட நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

Advertisement

Advertisement