• Jul 18 2025

வசந்த் ரவி மற்றும் சபரீஷ் நந்தா கூட்டணியில் "இந்திரா"...!வெளியான மோஷன் போஸ்டர்....!

Roshika / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் புதுமையான முயற்சிகளுக்குத் தளம் அமைத்து வருபவர்களில் முன்னணியில் இருக்கும் இயக்குநர் சபரீஷ் நந்தா, தனது அடுத்த படமாக ‘இந்திரா’ எனும் படத்துடன் ரசிகர்களிடம் ஒரு வித்தியாசமான செய்தியைக் கொண்டு வந்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் "வசந்த் ரவி" நடித்திருப்பது ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் மூலம் கதையின் மையக் கருத்தும், வசந்த் ரவியின் அழுத்தமான தோற்றமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெளியான மோஷன் போஸ்டரில் வசந்த் ரவியின் intense look, தனித்துவமான விழிகள், மற்றும் ஒரு திடமான பின்னணியில் காட்டப்படும் மறைமுகமான வன்முறை சூழ்நிலை அனைத்தும் கதையின் திசையை எதிர்பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த போஸ்டர், சினிமா ரசிகர்களிடையே வித்தியாசமான கதையை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.


படத்தின் தலைப்பு “இந்திரா” என்பதிலேயே பல்வேறு கணிப்புகள் மற்றும் சுவாரஸ்யங்களை உருவாக்கியுள்ளது. இது ஒரு பெண் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறதா? அல்லது ஒரு கட்டமைக்கப்பட்ட சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா? என்பதை அதிகாரபூர்வமான அறிவிப்புகள் மூலம் தான்  அறிய முடியும்.

தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய வசந்த் ரவி, இந்திரா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ஒரு மனித உணர்வுகளும், போராட்டமும் மையமாக கொண்ட கதையை எடுத்துக்கொண்டு வருகிறார் என்று தோன்றுகிறது. படத்தின் மோஷன் போஸ்டரையே பார்த்தாலே, வசந்த் ரவியின் தோற்றம் மிகவும் மாறுபட்டது. இது அவருடைய சினிமா பயணத்திற்கு பெரும் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


தமிழ் சினிமா, புதுமை மற்றும் திறமைகளை வரவேற்கும் ஒரு தருணத்தில், ‘இந்திரா’ எனும் படத்தின் மோஷன் போஸ்டர், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வசந்த் ரவியின் நடிப்பு, சபரீஷ் நந்தாவின் இயக்கம், மற்றும் அதன் பின்னணியில் உருவாகும் சமூகப் பார்வைகள்  இவை அனைத்தும் சேர்ந்து ஒரு முக்கியமான திரைப்படத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement