தமிழ் சீரியல் உலகில் இதயம் மற்றும் செம்பருத்தி போன்ற மெகா ஹிட் தொடர்களின் மூலம் பார்வையாளர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார். அவரது அழகு, மென்மையான நடிப்பு என்பன மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
தொலைக்காட்சியில் ஜனனியின் தோற்றம் என்றால், ஒரு அடக்கமான பெண்ணின் கதைதான் நினைவுக்கு வருகிறது. “இதயம்” மற்றும் “செம்பருத்தி” ஆகிய தொடர்களில் அவர் ஏற்ற கேரக்டர்கள் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்திருந்தது.
ஆனால் தற்போது, ஒரு மாடர்ன் லுக் உடையில் கிளாமரா போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டதும், ரசிகர்கள் “இவங்க என்ன இப்டி மாறிட்டாங்க?” என்ற ஷாக் ஆகியுள்ளனர். வைரலான போட்டோஸ் இதோ....
Listen News!