90S கால கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சேரன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரும் ஆவார் இவருடைய திரைப்படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
நேர்காணலில் ஆரம்பத்தில் தற்போது அற்புதமான திரைப்படங்கள் வருகின்றன. அவற்றின் கதைக்களம் "குடும்பத்தினை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது" . இந்த மாதிரியான படங்களை நீங்கள் தான் இயக்கி உள்ளீர்கள் ஏன் தற்போது படங்களை இயக்குவது கிடையாது ? என்ற கேள்விக்கு சேரன் அவர்கள் பதில் அளித்துள்ளார் . "சினிமாவே என்னுடைய உலகம் என நினைக்கின்ற படியால் சினிமா இல்லாமல் இருக்க முடியாது. இன்றைய சூழ் நிலையில் சுலபாக எடுத்து விட முடியது. குறிப்பாக இரண்டு விடயம் "இவர்கள் மூத்த இயக்குநர்கள், இவர்களிடம் வேலை செய்யமுடியுமா?, இவர்கள் நமக்கு ஏற்ற மாதிரி இருப்பார்களா?, நாம் பிழைகள் திருத்த முடியுமா? எனப்பல கேள்விகள் எழுகின்றன எனக்கூறியுள்ளார் .
மேலும் தொடர்ந்து "வெற்றி படங்கள் கொடுத்து நிறைய காலம் ஆகி விட்டது,பழைய திரைப்படங்கள் மாதிரி எடுப்பார்களா, தயாரிப்பு நிறுவனம் எமக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் எனப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சரி செய்து விட்டுத்தான் திரைப்படம் பண்ணனும் எனக் கூறியதுடன் தற்போது நான் " ஜர்னி "படம் பண்ணதாவும், நல்ல நடிகர்களை வைத்து எடுக்கவும், தியேட்டர் இருந்தாலும் நல்ல நடிகர்கள் வேண்டும். இப்போது 100படத்தில் 20நல்ல படமாக எடுத்தாலும் 4 படம் தான் திரையரங்கில் ஓடும். தற்போதைய இளம் இயக்குநர்கள் நாம எடுக்கின்ற மாதிரி தற்போது எடுக்கின்றார். அவர்கள் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர்கள் நம்ம கூடவும் சேர்ந்து வேலை செய்தால் நம்மளாலும் படங்கள் எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார் .
இயக்குநர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள் "நடிகருக்கு கதையை சொல்லி விட்டு அவர்கள் எப்போது ok சொல்வர்கள் எனக் காத்திருக்கும் வலி மிகவும் கொடுமையானது எனக் கூறியதுடன். அவர்கள் காத்திருக்க வைக்காமல் ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் பதில் சொல்லி அதனை முடித்து விடுவது மேல்" எனக் கூறினார். மேலும் என்னுடைய கால கட்டிடத்தில் அறிமுக இயக்குநர்களின் திரைப்படம் வெற்றி அடைந்து விட்டால் எல்லா இயக்குநர்களும் அழைத்து பாராட்டுவர்கள். தற்போதைய சூழ்நிலைகளின் அவ்வாறான விடயங்கள் இடம் பெறுகின்ற என சிந்தித்து பார்த்தல் இல்லை என்று தான் கூறமுடியும். இந்த கால கட்டிடத்தில் போட்டியும் ,பொறாமையும் சினிமாத்துறையில் வளர்ந்து காணப்படுகின்றன.
மிக பெரிய இயக்குநர்கள் தன்னுடைய திரைப்படத்தினை பார்த்துவிட்டு அதாவது "பாரதிராஜா சேர் ,பால சந்திரன் சேர்,மகேந்திரன் சேர் , பாலு மகேந்திரா சேர்" பாராட்டியதாகவும், இப்படி ஒரு படம் அவர்கள் இயக்கவில்லை எனக் கூறியதாகவும் கூறினார். முதல் எந்த திரையரங்கில் என்ன படம் ஓடும் எனத் தெரியும் தற்போது தெரியவில்லை எனவும் திரைத்துறை முழுவதும் வியாபாரமாக மாறிவிட்டதாக கூறினார்.
Listen News!