சினிமாவில் மாத்திரமின்றி நடிகர் அஜித்குமார் கார் ரேசிங்கிலும் அசத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்படுள்ளது.
இவர் துபாயில் இடம்பெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் இந்திய அணி சார்பில் கலந்து மூன்றாம் இடத்தை பிடித்து பெருமை சேர்த்தார். இது குறித்து சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது vk சுந்தர் அஜித்தின் வெற்றி குறித்து பேசியுள்ளார். அவர் "அஜித்தின் எல்லா வெற்றிக்கும் பின்னாடி இருக்குறது ஷாலினி தான் - அவங்க கொடுக்குற தைரியம் தான் ...!" என கூறியுள்ளார்.
Listen News!