• Sep 02 2025

விஜய் அரசியலுக்கு போய்ட்டாரு.. பிரசாந்த் கம்பேக் கொடுத்துட்டாரு.. அதனால..?? வனிதா பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் பிரசாந்த். ஆனாலும் இவர் நீண்ட இடைவேளிக்கு பிறகு அந்தகன்  படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் பிரசாந்தின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து ஆயிரம் பட்டாசு வெடித்து வெகுவாக கொண்டாடி இருந்தார்கள்.

அந்தகன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாத்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், ஜோகி பாபு, வனிதா விஜயகுமார், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். திரையில் மீண்டும் பிரசாந்த் சிம்ரனை பார்த்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.


நடிகர் பிரசாந்த் கோட் படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா மைக் மோகன் உள்ளிட்டவர் நடிப்பதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தற்போது விஜய் அரசியலுக்கு போயிட்டாரு. இப்போது பிரசாந்த் சினிமாவுக்கு மறுபடியும் வந்து இருக்காரு.  அதனால இனி பிரசாந்த் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், இன்னும் ஒரு சில படத்துடன் முற்றிலுமாக சினிமா துறையில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்ததால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement