• Oct 26 2024

என்ன நடந்தது என்று தெரியாமல் கேமராவை தூக்கிட்டு வர வேண்டாம்! காட்டமாக பதிலளித்த புகழ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா தான் டைட்டில் வின்னர் என தகவல்களும் வெளியாகி உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை இதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம் தொகுப்பாளினி ஒருவர் தான் என்றும் தனது வேலையை செய்ய விடாமல் அடிக்கடி இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதை தொடர்ந்து மணிமேகலை சொன்ன அந்த தொகுப்பாளினி பிரியங்கா தான் என பிரியங்காவுக்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. அதேபோல மணிமேகலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பில் குக் வித் கோமாளி பிரபலமான புகழிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


அதற்கு அவர் கூறுகையில், இது தனிப்பட்ட முறையில் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் பிரச்சனை. அவர்கள் தான் இதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோபத்துடன் பேசியுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளாமல் கேமராவை தூக்கிக்கொண்டு கருத்துக்கணிக்க வேண்டாம். இது போன்று ஆயிரம் பேர் கருத்துக்களை சொல்வதாக வீடியோ வெளியிட்டு வருவதாகவும் என்ன நடந்தது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பேசட்டும் என்றும் புகழ் கூறியுள்ளார். தற்பொழுது அவருடைய பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement