தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படமான ‘ஜனநாயகன்’ தற்போது முக்கிய கட்டத்தை கடந்துள்ளது. தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஹீரோயின் பகுதி முடிவடைந்துவிட்டது என பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட பூஜா, “today shoot its a wrop for me on instagram.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவோடு, தனது புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்தில் முதல் முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டே, அப்படத்தில் மிகக்குறைந்தளவு கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பது, அவரது தமிழ் படங்களின் கம்பேக் என்றே பார்க்கப்படுகின்றது. இதனால், பூஜாவுக்கு இந்த படம் மிக முக்கியமானதாகவே அமைந்திருக்கிறது.
விஜயின் பிறந்தநாள் (ஜூன் 22) அன்று 'ஜனநாயகன்' திரைப்படத்தின் “க்ளிம்ப்ஸ்” வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. திரைப்படம் தீபாவளிக்கு அல்லது பொங்கல் ரிலீஸாக இருக்கும் எனவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!