• Jun 07 2025

ஏசி அறை தான் வேண்டும்.. அடம் பிடித்த பாக்கியம்.. விட்டு கொடுத்த மீனா, ராஜிக்கு ஏற்பட்ட விபரீதம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சரவணன் - தங்கமயில் திருமணம் குறித்த காட்சிகள் இடம் பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் ராஜி மற்றும் குழலி டான்ஸ் ஆடிய விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் கோபித்துக் கொண்ட குழலியை அவரது அப்பா பாண்டியன் மற்றும் அம்மா கோமதி சமாதானப்படுத்துகின்றனர்.

இதனை அடுத்து கோமதி, அரசி, மீனா, ராஜி ஆகியோர் ஒரு அறையில் தூங்க முயன்றபோது திடீரென ஒரு சிலர் வந்து நாங்களும் இந்த அறையில் தூங்கிக் கொள்கிறோம் என்று சொல்ல மீனா, ராஜிக்கு தர்ம சங்கடம் ஆகிறது. இதனை அடுத்து நாங்கள் வேறு அறைக்கு செல்கிறோம் என்று மீனா, ராஜி சொல்ல விருப்பம் இல்லாமல் அவர்களை கோமதி அனுப்பி வைக்கிறார்.



இந்த நிலையில் பாக்கியம் குடும்பத்தினர் தங்கிய அறையில் ஏசி வேலை செய்யவில்லை என்பதால் அவர்கள் வேறு அறைக்கு செல்கின்றனர். மணமகள் அறை என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறையை விட்டு அவர்கள் பக்கத்தில் உள்ள ஏசி அறைக்கு சென்று விட்டதால் அங்கு வந்த மீனா, ராஜீ, ‘நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்க எங்கள் அறையில் ஏசி வேலை செய்யவில்லை அதனால் இந்த அறையில் தங்க போகிறோம் என்று கூறுகின்றனர்.

இதையடுத்து வேறு வழியின்றி மணமகள் அறையில் ராஜி மற்றும் மீனா தூங்குகின்றனர். இதனால் தான் குமரவேல் அடியாட்கள் தங்கமயிலை கடத்துவதற்கு பதிலாக மீனா ராஜியை கடத்த உள்ளனர் என்பதை முன்னோட்ட வீடியோவில் பார்த்தோம். இந்த அறை மாற்ற குழப்பத்தால் தான் மீனா, ராஜிக்கு விபரீதம் ஏற்பட உள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென சரவணன் தங்க மயிலுக்கு போன் செய்து பேசும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்த எபிசோடில் மீனா ராஜி கடத்தப்படுவது, சரவணன் - தங்கமயில் திருமணம் கேள்விக்குறியாவது போன்ற பரபரப்பான காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement