• Jun 05 2025

சமூக விழிப்புணர்வுக் கதைக்களம்…‘பரமசிவன் பாத்திமா’ படத்தைப் பாராட்டிய சீமான்..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான கதாநாயகர்களில் ஒருவராகவும் பன்முகத்தன்மையுடன் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவராகவும் விமல் விளங்குகின்றார். எளிமையான கதாப்பாத்திரங்கள், கிராமத்து சூழலை பூரணமாக பிரதிபலிக்கும் பாணி, நடிப்பின் இயல்பு என்பன மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டார்.  தற்போது, அவர் நடித்துள்ள 34-வது திரைப்படமான ‘பரமசிவன் பாத்திமா’, பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘பரமசிவன் பாத்திமா’ என்ற சுவாரஸ்யமான தலைப்பே இப்படத்தின் தனித்துவத்தை சொல்கின்றது. இந்த திரைப்படம் லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சமூக, கலாசார, அரசியல் கலந்த கதைகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி பாணியை உருவாக்கியவர்.

‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரெய்லரை சமீபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இணைந்து தங்களது 'X' தளப்பக்கங்களில் வெளியிட்டனர்.


மேலும், ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் ஒரு சிறப்புக் காட்சியை பார்த்த தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது உரையாடல்களில் இப்படம் தன் மனதிற்கு நெருக்கமாக இருந்ததாக குறிப்பிட்டார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் இயக்கப் பாணி, கதையின் சமூக விழிப்புணர்வு மற்றும் நுணுக்கமான கதைக்கள அமைப்பையும் அவர் பாராட்டியிருந்தார்.


Advertisement

Advertisement