• Jul 18 2025

இலங்கையில் பரபரப்பு...! இந்தியா திரும்பிய சிவகார்த்திகேயன் படக்குழு...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வந்தாலும் எந்த படமும் திரைக்கு வராமையினால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். அமரன் பட வெற்றியின் பின்னர் இவருக்கு அதிஷ்டம் வந்தது என கூறினாலும் பல பிரச்சனைகளில் இவர் சிக்கியுள்ளார். மேலும் இவர் நடித்து வந்த "பராசக்தி " படத்தின் பிரச்சனைகள் முடிவடைந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.


இந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "மதராஸி " திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்று முன்தினம் இலங்கையில் கண்டைனர் யாட் ஒன்றில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்கு திடீரென நிலவிய காலநிலை மாற்றத்தினால் படக்குழு தங்குமிட வசதிகள் இல்லாமல் தவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


மேலும் இதற்கு மத்தியிலும் படப்பிடிப்பு வேலைகளை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் சென்னை திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement