• Aug 04 2025

திருப்பதியில் பக்தர்கள் செய்த செயலால் டென்ஷனான சூர்யா...! வைரலாகும் வீடியோ...!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தொடங்கியுள்ள அகரம் தொண்டு நிறுவனம், கடந்த 15 ஆண்டுகளாக கல்வி மற்றும் சமூக நலத்திற்கு முக்கிய பங்களிப்பளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) சிறப்பாக நடைபெற்றது.


சென்னை நகரில் நடைபெற்ற இவ்விழாவில், கடந்த காலங்களில் அகரம் மூலம் பயனடைந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தனது வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை பகிர்ந்துகொண்டனர். விழாவில் நடிகை ஜோதிகா, நடிகர் சிவகுமார், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கவனித்தனர்.


இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல் ஹாசன் பங்கேற்று, அகரத்தின் முயற்சியை பாராட்டினார். சூர்யாவுக்கு உற்சாகமாக வாழ்த்துகள் தெரிவித்தார்.

சூர்யா – ஜோதிகா தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். ஆனால், கோவில் முன் அவர்களை பார்த்த சில ரசிகர்கள் “ஹலோ போதும், விடுங்க...” என திருப்பதியில் பக்தர்கள் செய்த செயலால் டென்ஷனான சூர்யாவின்  வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement