தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் தான் ‘தக் லைஃப்’. 38 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இணையும் படம் என்பதால், இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் திரையரங்கில் நிஜமாவில்லை என்றே தற்பொழுது கூறப்படுகின்றது. ‘தக் லைஃப்’ படம் தற்போது விமர்சனங்களின் மையமாகவும், இணையத்தில் ட்ரோல்களின் புள்ளியாகவும் மாறியுள்ளது.
இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பன்முக நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். படம் தொடங்கும் நேரத்திலிருந்து ரசிகர்களிடையே பலவகை எண்ணங்கள் எழுந்தன. 1987ஆம் ஆண்டு ‘நாயகன்’ மூலம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டுசென்ற மணிரத்னம், தற்போது ‘தக் லைஃப்’ மூலம் புது பரிமாணம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படத்தின் திரைக்கதை, படைப்பியல் நடை, கதாபாத்திர வளர்ச்சி ஆகியவை, ரசிகர்களுக்கு எதிர்மறையான அனுபவத்தை தந்ததாக சமூக வலைத்தளங்களும், விமர்சனங்களும் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 36.2 கோடி வசூல் செய்து பிரமாண்ட தொடக்கம் எடுத்தது. அதன் பிறகு, படம் எதிர்பார்த்த ரேஞ்சினை அடையமுடியவில்லை. ஐந்து நாட்கள் முடிவில் இப்படம் உலகளவில் 82 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
Listen News!