• Apr 17 2026

பெண்கள் மத்தியில் பேண்ட் ஜிப்பை கழட்டிய நபர்! நடிகை வித்யா பாலனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை வித்யா பாலன். நாயகன் போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான வித்யா பாலன் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது 45 வயதாகும் வித்யா பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். 


" ஒரு வேலைக்காக வெளியில் செல்ல ரயிலில் பயணித்தேன். பெண்கள் பெட்டியில் இருந்தபோது திடீரென ஒரு ஆண் அந்த பெட்டியில் ஏறினார். பெண்கள் எல்லோரும் தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் உடனே பேண்ட் ஜிப்பை கழட்டி அவரின் பிறப்புறுப்பை வெளியே எடுத்து சுய இன்பம் செய்ய ஆரம்பித்தார்.


என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை, ஒரு கட்டத்தில் அந்த நபரை அடித்து அடுத்த ஸ்டேஷன் வந்ததும் வெளியே தள்ளி காவல் துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.


தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், ஏதேனும் பிரச்சனை வருமா என்று ஒரு பெண் ஒதுங்கிவிடாமல் பயப்படாமல் தங்களால் முடிந்த நடவடிக்கையை எடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement