சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, டாக்டர் சீதாவுக்கு இருக்கிற பிரச்சனையைப் பாத்துச் சரி பண்ணுங்க இல்லன்னா அவங்களுக்கு பின்னாடி ரொம்ப பெரிய பிரச்சனை வந்திடும் என்கிறார். அதைக் கேட்ட மீனா என்ன டாக்டர் இப்புடி எல்லாம் சொல்லுறீங்க என்று கேட்கிறார். பின் டாக்டர், நல்லா ரெஸ்ட் எடுத்து மனசுவிட்டுப் பேசச்சொல்லுங்க ஒரு பிரச்சனையும் வராது என்கிறார். அதனை அடுத்து மீனாவோட அம்மா மீனாவைப் பாத்து என்னடி இவங்க இப்புடி எல்லாம் சொல்லி பயமுறுத்துறாங்க என்று சொல்லுறார்.
அதுக்கு மீனா அவளுக்கு இப்புடி எல்லாம் ஆனதுக்கு காரணமே நாங்க தான் என்கிறார். மேலும் சீதாவை அருணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முத்துவிடம் சொல்லுங்க என்கிறார். இதனை அடுத்து மனோஜ் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்ப விஜயா வந்து மனோஜுக்கு கை கால் எல்லாம் ஒழுங்கா இருக்கு ரோகிணி தள்ளி இரு என்கிறார்.
இதனை அடுத்து, முத்து கடையில வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுறதைப் பாத்த மீனா ஏன் அங்க எல்லாம் வாங்கி சாப்பிடுறீங்க என்று கேட்கிறார். அதுக்கு முத்து உன்ன வெறுப்பேத்த தான் இப்புடி எல்லாம் பண்ணுறேன் என்கிறார். பின் முத்து மீனாவப் பாத்து என்ர பேச்சை கேட்கக் கூடாது என்று முடிவெடுத்திட்ட இனி ஒன்னும் பண்ணேலா என்று சொல்லுறார்.
அதனை அடுத்து மீனா சீதாவுக்கு அருணை கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுறார். அதுக்கு முத்து அந்த கெட்டவனை கல்யாணம் பண்ண நான் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். பின் மீனா இந்த விஷயத்தை உங்க கிட்டப் பேசி இனி ஒரு பிரயோசனமும் இல்ல நான் மாமா கிட்டயே பேசுறேன் என்கிறார். பின் அண்ணாமலை வந்து முத்து கூட கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!