• Jun 14 2025

அனிருத், காவியாமாறன் காதல் உறவு உறுதியா? பைல்வான் ரங்கநாதன் பேட்டி...!

Roshika / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கிய ஓர் காதல் வதந்தி  இப்போது “உறுதியான உறவு” எனக் கூறப்படும் அளவுக்கு பரபரப்பாக பரவி வருகிறது. இசைத்துறையின் இளைஞர்களின் கிங் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்  CEO காவியாமாறன் இடையே காதல் மலர்ந்திருப்பதாக மூத்த நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பைல்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் உறுதியாக கூறிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


பைல்வான் ரங்கநாதன் கூறுகையில், இவர்கள் இருவரும் அமெரிக்கா, லாஸ் வேகாஸில் சந்தித்து, அப்போது முதல் மிகவும் நெருக்கமான உறவில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்த தகவல் வெறும் வார்த்தை இல்லை அதற்கான ஆதாரங்களுடன் கூடிய உறுதியான தகவல் என்றும் அவர் கூறியுள்ளார் . இது சாதாரண காதல் இல்ல, பெரிய இடத்து சமாச்சாரம்… அதனால் தான் இது இதுவரை வெளிவரவில்லை” என்கிறார் பைல்வான்.


மேலும் ஆண்ட்ரியா, நயன்தாரா போன்ற நடிகைகளுடன் பெயர் சூழ்ந்த அனிருத், இப்போது காவியாவுடன் உறவு வளர்த்து வருகிறார் என்றும் இவர் ஒரு ‘ஜாலி பர்சன்’, அதே சமயம் இசையில் வீரியமிக்கவர் என்றும் அவர் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் ‘கலக்கல் கூட்டணி’... ஆனால் காதலில் கொஞ்சம் ஓவர் ஆகிடுறாங்க! என்று கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் மற்றும் சன் டிவியின் சக்திவாய்ந்த நிர்வாகக் குடும்பத்தை சேர்ந்த காவியாமாறன், மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பேரபதி மற்றும் கலாநிதி மாறனின் மகளாக, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் 4,000 கோடி சொத்து படைத்த குடும்பம். இப்போது அந்த குடும்பத்திற்கு மாப்பிள்ளை தேடுகின்ற நேரம் இது தான்! எனக் கூறியுள்ளார். 

பைல்வான் ரங்கநாதன் அளித்த தகவலின் முக்கியமான விடயமாக , திருமணம் பற்றிய திடீர் உறுதி தான். அதாவது ரஜினிகாந்தின் குடும்பம் மற்றும் அனிருத் குடும்பம், சமூக, கலை, குடும்ப பிணைப்பு அடிப்படையில் ஏற்கனவே நெருங்கிய உறவு என்றும், இதன் மூலம் இரண்டு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் ஏற்கும் வாய்ப்பு அதிகம் என்றும் பைல்வான் கூறுகிறார். இந்நிலையில், முக்கியமாக இரு தரப்பிலிருந்தும்  அனிருத் மற்றும் காவியாமாறன் இருந்து  மறுப்பு வராது என்று கூறியுள்ளார், இந்த தகவலுக்கு மேலும் வலுவை அளிக்கிறது. இது உறுதிசெய்யப்படும் விஷயம் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் மிச்சம்” என்கிறார் பைல்வான்.




.


Advertisement

Advertisement