தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் நேற்றயதினம் போதைப்பெருள் தடுப்பு பிரிவினரால் கைது செயப்பட்டிருந்தார். இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மேலும் அவர் போதைப்பொருள் வாங்கியதும், அவரின் மொபைலை check செய்த போது அவர் பிரசாத்திற்கு பணம் அனுப்பியது உறுதி செய்யப்பட்டிருந்தது . இதன் அடிப்படையில் தான் தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்திற்க்கு ஜூலை 7ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்தது விசாரணை செய்வதற்கு சிறையில் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!