• Oct 26 2024

கோபி நடுத்தெருவுக்கு வந்தாலும் இவங்க சக்களத்தி சண்டை முடியாது போலவே..! புது ப்ரோமோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஈஸ்வரி விடுதலையாகி வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து, அங்கு வந்த கோபி அம்மாவுடன் பேச வேண்டும் என தகராறு பண்ணுகிறார்.

ஆனாலும் இத்தனை நாட்களாக தனது மகனுக்கு துணை நின்ற ஈஸ்வரி, இன்றைய தினம் அவரை மொத்தமாக தலைமுழுகி விடுகிறார். அதுமட்டுமின்றி கோபியை நிக்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டு வெளியே போகுமாறு துரத்தி அடிக்கிறார்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாக்கியா வரும்போது ராதிகாவும் மையூவும் எதிரில் சந்திக்கிறார்கள்.

இதன்போது பாக்கியா மையூவை சென்று கன்னத்தில் தடவ, கோவப்பட்ட ராதிகா உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என்ட பிள்ளையை கோர்ட்டுக்கு கூட்டிப் போக என கேட்கின்றார்.


இதே நிலைமை எனக்கு வந்து உங்க புள்ள இனியாவ நான் கோர்ட்டுக்கு கூட்டிப் போயிருந்தா அப்ப எப்படி இருந்து இருக்கும் உங்களுக்கு என கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் நிறைய யோசித்தேன் ஆனாலும் வேற வழி தெரியலை என  சொல்லுகிறார்.

இதனால் தனக்கும் நேரம் வரும் அப்போ உங்களை பார்த்துக்கொள்கிறேன் என உச்சகட்ட கோபத்தில் மையூவை இழுத்துக் கொண்டு ராதிகா செல்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

இதை பார்த்த ரசிகர்கள் கோபி நடுத்தெருவுக்கு வந்தாலும் இவங்க சண்டை முடியாது போல என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement