தமிழ் சினிமா உலகில் நடிகைகளின் வாழ்க்கைக் காலம் குறுகியது என்பது ஒரு காலத்து விமர்சனம். அதனை முற்றிலும் தகர்த்தெறிந்தவர்கள் நயன்தாரா மற்றும் த்ரிஷா. இருவரும் 40 வயதை கடந்தும், இன்னும் முக்கிய ஹீரோயின்களாகவும், தனக்கென சிறப்பான கதையைச் சுமக்கும் நாயகிகளாகவும் திகழ்கின்றனர்.
அவர்களின் இடத்தை எவரும் விரைவில் பிடிக்க முடியாத நிலை சமீபகாலமாக நிலவிவந்தது. இருப்பினும், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மூன்று நடிகைகள், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய சினிமாவில் பிரபலமடைந்து மார்க்கெட்டில் புதிய அதிர்வலையை உருவாக்கி வருகின்றனர்
அந்த நடிகைகளாக கயாடு லோகர், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் விளங்குகின்றனர். இந்த மூவரும் தமிழ் சினிமா நடிகைகளுக்கான மார்க்கெட், 'முடிவின்றி வளரக்கூடியது' என்பதை நிரூபித்துள்ளனர். அத்துடன் இவர்களுக்கு பல படங்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!