தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தனது நீண்டநாள் மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் இல்ல விழாவில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான காணொளிகள் வைரலாகி வருகிறது.
மேலும், தற்போது முதலமைச்சராக திகழும் நிலையிலும் தன்னுடைய அரசியல் பணிகள், அரசு பொறுப்புகளில் பிஸியாக இருக்கும் நிலையிலும், நெருக்கமானவர்களின் முக்கிய நிகழ்வுகளில் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவிக்கும் விஜயின் பண்பு மீண்டும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த விழாவிற்கு விஜய் பாரம்பரியமான பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டை அணிந்து எளிமையான தோற்றத்தில் வருகை தந்தார். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்த அவரது தோற்றம் அங்கிருந்தவர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தது.
குறிப்பாக, அவரது புன்னகையுடன் கூடிய எளிமையான நடத்தை விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறித்த விழா நடைபெற்ற இடத்திற்கு விஜய் வந்ததும், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக குரலுடன் அவரை வரவேற்றனர். பலரும் கைஅசைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை நேரில் காண செல்போன்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவு செய்தனர். விஜயும் அமைதியாக அனைவருக்கும் கைகாட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், ஜெகதீஷ் பழனிச்சாமியின் குடும்பத்தினருடன் சில நேரம் செலவிட்ட விஜய், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடி வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது வருகையால் அந்த இல்ல விழா மேலும் சிறப்பானதாக மாறியதாகவும் அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் அணிந்திருந்த பாரம்பரிய உடை மற்றும் அவரது எளிமையான தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் “முதலமைச்சரான பிறகும் அதே எளிமை”, “வேஷ்டியில் விஜய் செம்ம மாஸ்” போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அரசியலிலும், பொதுவாழ்விலும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வரும் விஜய், இப்படியான தனிப்பட்ட நிகழ்வுகளிலும் சாதாரண மனிதராக கலந்து கொள்வது ரசிகர்களிடையே மேலும் நெருக்கத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Annan @CMOTamilnadu at Jagadeesh bro Home function ♥️😍!!@TVKVijayHQ pic.twitter.com/AnBj1ejezl
Listen News!