"தக் லைஃப்" திரைப்படம் வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுவதற்கான முக்கிய காரணமே, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பணியாற்றுவது தான்.
அந்த மாபெரும் கூட்டணி தற்போது “தக் லைஃப்” மூலம் மீண்டும் உருவாகின்றது என்பதுதான் ரசிகர்களின் ஆர்வத்தை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனைத் தொடர்ந்து பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்திருக்கின்றனர். அவர்களில் முதன்மையாக, சிம்பு , த்ரிஷா ,ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி காணப்படுகின்றனர்.
இந்த திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற மூன்று பிரபல நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இப்படத்தில் ரசிகர்களின் இதயங்களைத் துளைக்கும் அளவிற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். ஏற்கனவே வெளியான பாடல்களில் ‘முத்தமழை’ என்ற பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த ‘முத்தமழை’ பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்களின் மனதில் நிலை கொண்டிருக்கின்றது. இது குறித்து இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட பாராட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் , "ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் - நம் ஏ.ஆர்.ரகுமான் அவர்களால் மட்டுமே முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.
Listen News!