தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் 'தக் லைஃப்'. இது ஒரு சாதாரண படம் அல்ல. தமிழ் சினிமாவின் சிறப்பான கூட்டணியாகக் கருதப்படும் கமல்ஹாசன் – மணிரத்னம் இருவரும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து உருவாக்கும் பிரமாண்ட படைப்பு இது.
1987-ல் வெளிவந்த ‘நாயகன்’ படம் தமிழ் சினிமாவின் பொற்கால நாயகப் படைப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணையும் படம் என்பதால், தக் லைஃப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகவும் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்டணியுடன் சேர்ந்து, நடிகர் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் வழங்கிய மொழியியல் தொடர்பான கருத்துகள் கர்நாடகா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டது.
இந்த சர்ச்சையால் உருவான பதற்றத்திற்கு நடுவே, தமிழக அரசின் திடீர் முடிவு தற்போது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு 'தக் லைஃப்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் சிறப்பு அனுமதி மூலம், படம் ஒரு நாள் மட்டும் திரையரங்குகளில் காலை 9 மணியிலிருந்து இரவு 2 மணிவரை 5 காட்சிகள் வெளியாகவுள்ளது என்பதும் தற்பொழுது உறுதியாகி உள்ளது.
Listen News!