• Apr 17 2026

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண தேதி ரிலீஸ்.. எங்கே.? எப்போது தெரியுமா.?

shali / 3 months ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையில் பேசப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாக நீண்ட காலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் வெளியான காலத்திலிருந்தே, இவர்களுக்குள் காதல் உறவு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், இந்த காதல் கிசுகிசுக்களுக்கு இருவரும் நேரடியாக உறுதி அளிக்கவோ அல்லது மறுக்கவோ இல்லாமல், பல ஆண்டுகளாக அமைதியாகவே இருந்து வந்தனர். பேட்டிகளில் கேட்கப்படும் போதெல்லாம், ஒருவருக்கு ஒருவர் நல்ல நண்பர்கள் என்று மட்டும் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது.


2018ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவை ஒரே நேரத்தில் நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்ற படம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இருவரும் மீண்டும் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்திலும் நடித்தனர்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு காலத்திலிருந்தே, இருவருக்கு இடையே நல்ல நட்பு உருவாகி, அது காதலாக மாறியதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. ஒரே மாதிரியான பயணங்கள், சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் பதிவிடப்படும் புகைப்படங்கள், விடுமுறைகளில் ஒரே இடங்களில் இருப்பது போன்ற விஷயங்கள், இந்த காதல் கிசுகிசுக்களை மேலும் வலுப்படுத்தின.

இத்தனை ஆண்டுகளாக அமைதி காத்து வந்த இந்த ஜோடி, கடந்த அக்டோபர் மாதம் குடும்பத்தினர் மத்தியில் ரகசியமாக நிச்சயம் செய்து கொண்டனர். இந்த நிச்சய விழா மிகவும் எளிமையாக, இரு குடும்பத்தினரின் முன்னிலையில் மட்டும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, தை மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, வருகின்ற பிப்ரவரி 26ம் தேதி, ராஜஸ்தானின் அழகிய நகரமான உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணத்தை தொடர்ந்து, ஹைதராபாத்தில் திரைப்படத்துறையினருக்காக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement