பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசனின் ஒரு கருத்து தற்போது அவரை உருக்குலைத்துவிட்டதாகவே சொல்லப்படுகின்றது. அவரது 'தக் லைஃப்' திரைப்படத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் கர்நாடகாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போது இந்த விவகாரம் சட்டரீதியாக மாறியுள்ள நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் நேரடியாக கமல்ஹாசனிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக இருந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் "தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது " என்று கூறியிருந்தார். இதையடுத்து, கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட பல அமைப்புகள் கமலிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் தலையீடு செய்துள்ளது. வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். நீதிபதிகள் கமல்ஹாசனின் பேச்சு குறித்து, “இவ்வாறு பொது இடத்தில் ஒரு பிரபலமான நபர் பேசலாமா? , மன்னிப்புக் கேட்டால் என்ன தவறு.?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, #KamalHaasan, #ThugLifeControversy, #KannadaProtest போன்ற ஹாஸ்டாக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. தமிழக மக்கள் சிலர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக வலைத்தளங்களிலும், டுவிட்டரிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Listen News!