தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், துணைவேடங்களிலும் நடித்து வருகின்றார். இவர் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த வருடம் ஜூலை 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் பூஜை ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வரும் இவர் . 2012ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் பல திரைப்படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார். சண்டக்கோழி 2 சர்க்கார்,என பல திரைப்படங்களை கூற முடியும் . தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார் . இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது பூஜை செய்து வழிபட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகரக்ள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!