• Sep 08 2025

திடீரென ரசிகர்களின் மொபைல்களை பறித்த நடிகை..!ஏன் தெரியுமா?

luxshi / 3 hours ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலா. 


அவர் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தால் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வருபவர்.

லெஜண்ட் சரவணன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் லெஜண்ட். இந்த படத்தில் சில காட்சிகளே நடித்து பல கோடி சம்பளம் பெற்றார். 

தமிழ் சினிமாவிற்கு இவர் புதியது என்றாலும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலம். 


ஏதாவது பட நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, விருது விழா என எப்போதும் ஆக்டீவாக கலந்துகொள்வார். 

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், ரசிகர்களை சந்திக்க வந்தபோது சிலர் செல்பி எடுக்க, மொபைலை எடுத்தனர். 

அதற்கிடையில், நடிகை ஊர்வசி ராவ்டேலா திடீரென அந்த மொபைல்களை பறித்து சிரித்தபடி தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.


சில ரசிகர்கள் மொபைலை திரும்ப வழங்க மறுத்த போதும், உர்வசி சம்பவத்தை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்றி, பிறகு பாதுகாப்பாளர்களிடம் கொடுத்து, மீண்டும் உரிய ரசிகர்களிடம் வழங்கினார். 

இந்தச் செயல் மக்களிடையே பெரும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கிளப்பியது.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “மொபைலை பறிக்கிற முதல் ஹீரோயின்!” என காமெண்ட் செய்தும், வீடியோவை பரவலாக பகிர்ந்தும் வருகின்றனர். 

ரசிகர்களின் மகிழ்ச்சியை பெருக்கி, உர்வசி மீண்டும் தனது நகைச்சுவை மற்றும் தனிப்பட்ட சிரிப்புடன் அனைவரின் மனதை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement