மலையாள சினிமாவில் " மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியில் சாதனை படைத்திருந்தது. இந்த திரைப்படம் சிதம்பரம் எஸ். இயக்கத்தில் உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டுள்ளது . இந்நிலையில் படத்தினை தயாரிப்பாளருக்கு கேரளா உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் தயாரிப்பளரான சௌபின் சாகிர் நடித்துள்ளார்.மேலும் சிறீநாத் பாசி, பாலு வர்கீசு, கணபதி எஸ். பொதுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரகுமான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்துள்ளார்.
மேலும் "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் நிதி மோசடி வழக்கில் தயாரிப்பாளர்கள் "சௌபின் சாகிர் " உள்ளிட்ட மூவருமூவரை 14 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிடட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அதாவது படத்தின் தயாரிப்பில் ரூ.7 கோடி முதலீடு செய்த போதிலும் 40%லாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை சௌபின் சாகிர் நிறைவேற்றவில்லை என புகார் அளிக்க பட்டுள்ளது .இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த கேரளா உயர்நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!