• Sep 06 2025

ஜாலி mood-ல் திரியும் ரச்சிதா.. நெப்டிசன்களின் மனதைக் கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல்கள் மற்றும் தனிப்பட்ட நடிப்புத் திறமையால் தனி இடம் பிடித்தவர் ரச்சிதா மஹாலட்சுமி. இவருடைய ஒவ்வொரு தோற்றமும், செயல்பாடுகளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது. 


அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரச்சிதா வெளியிட்ட புதிய போட்டோஷூட் மற்றும் வீடியோ காட்சிகள், தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இயற்கையின் மத்தியில் அவர் எடுத்த புகைப்படங்கள், அவருடைய அழகையும், அமைதியான தன்மையையும் வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளன.


சமீபத்திய புகைப்படங்கள், ரச்சிதா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்டவை. அந்த சுற்றுலா இடம் பசுமை , மரங்கள், மேகமூட்டமடைந்த வானம், மற்றும் அமைதி நிறைந்ததாக காணப்படுகின்றது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்குப் பின்னர், ரச்சிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்கினை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement