• Jun 18 2025

சினிமாவைப்போல் கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும்..!நேர்காணலில் மனம் திறந்த அஜித் குமார்..!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

சினிமாத்துறையில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபபவர் அஜித் குமார். இவர் நடிப்பதை  தாண்டியும் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் அஜித் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தற்போது இவரது நடிப்பில் வெளியான "குட் பேட் அக்லி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்து இருந்தது. இந்த நிலையில் அஜித்குமார் அளித்த பேட்டியில் " என்னைப் பற்றி மற்றவர்களின்  விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டு கொள்ளமாட்டேன் என்றும் நான் என்றும் வெற்றியாளராக இருக்க  வேண்டும். 


மேலும் கூறுகையில் நான் முதன் முதலில் நடிக்க வந்த போது எனது உச்சரிப்பில் ஆங்கில மொழியின் சாயல் இருந்தது. எனக்கு தமிழ் சரியாக பேச வரவில்லை அதனால் பல விமர்சனங்கள் வந்த பிறகு எனது பலவீனத்தை பல முயற்சிகள் எடுத்து சரி செய்தேன்என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமாவைப்போல் கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும். ஆனால் பயிற்சி எடுப்பேன் மேலும் விரைவாக கற்றுக்கொண்டேன். தற்போது எனது நேரம் வந்து விட்டது, இது எனது நேரம் ,இனி பின்வாங்கமேடன் என்று கூறியுள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement