• Oct 26 2024

செழியனுக்கு விரைவில் புது கல்யாணம்? பொண்ணு பார்த்த ஈஸ்வரி! கோபிக்கு ரிவிட் அடித்த பாக்கியா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செழியனை மாப்பிள்ளை பார்ப்பதற்காக பெண் வீட்டிலிருந்து வருகிறார்கள்.  இதன்போது கோபி, ஈஸ்வரி, ராமமூர்த்தி மற்றும் ராதிகா ஆகியோர் பெண் வீட்டாரோடு  சம்பந்தம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராதிகாவை தனது மருமகள் என்று அறிமுகம் செய்கிறார் ஈஸ்வரி.

இதன்போது மாப்பிள்ளையை பார்க்க கேட்க, ஈஸ்வரி செழியனை அழைத்து வருகிறார். மேலும் பெண்ணின் போட்டோவை போனில் வாங்கி பார்த்து செழியனுக்கும் காட்டுகிறார். அவர் பார்த்துவிட்டு ஒன்னும் பேசாமல் வைத்துவிட்டு ரூமுக்கு செல்கிறார்.


அதனை நேரத்தில் பாக்கியாவும், இனியாவும் வருகிறார்கள். அங்கு செழியனுக்கு பெண் பார்ப்பதற்காக பெண் வீட்டில் இருந்து வந்தவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 

இதன் போது அவர்கள் பாக்கியா யார் என கேட்க, அதற்கு ராமமூர்த்தி அது என் மருமகள் என்று சொல்கிறார். அப்போ ராதிகா யாரு அவங்க சிஸ்டரா எனக் கேட்க, ஒன்றும் பேச முடியாமல் முழிக்கிறார்கள். அதற்கு கோபி அவர் என் எக்ஸ் வைப்.  நான் ராதிகா கூட இங்க இருக்கன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்காங்கன்னு சொல்லுகிறார்.

அதன்பின் பாக்கியாவுக்கு போனில் பெண்ணின் போட்டோவை காட்ட அவர் பார்க்காமல் கோபத்தில் சென்று விடுகிறார். நேரே  செழியன் ரூமுக்கு போய் இங்க என்ன நடக்குது? நீ என்ன முடிவுல இருக்கா? இப்பையும் வாயா திறந்து பேச மாட்டியா? அப்படி என விளாசுகிறார். மேலும் கீழே செழியனை அழைத்து வந்து உன் மனதில் என்ன இருக்கிறது என சொல்லுமாறு கூறுகிறார்.

ஆனாலும் செழியன் ஒன்றும் பேச முடியாமல் இருக்க, பாக்கியா  இவனுக்கு இன்னும் டிவோர்ஸ் கூட ஆகல, அவனுக்கு ஜெனி பிள்ள கூட வாழ்வதுதான் பிடிச்சிருக்கு, அவங்க மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிஞ்சி இருக்காங்க, ஆனா அவங்கள சேர்த்து வைக்க தான் போராடுறன். அவனுக்கு வேற கல்யாணம் பண்ணுறதுல இஷ்டம் இல்லை என சொல்கிறார்.

இதைக் கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைகிறார்கள். செழியனுக்கு டிவோர்ஸ் ஆகிவிட்டதாக தரகர் சொன்னதாக கூறுகிறார்கள்.இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement