இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் ஷங்கர் தற்போது தனது அடுத்த பெரிய திட்டமாக வரலாற்று நாவலான வேள்பாரியை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான வேள்பாரியாக நடிகர் சூர்யா நடிக்க வேண்டும் என்பதே ஷங்கரின் முதன்மை விருப்பமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இருவருக்கும் இடையே ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கரின் கடைசி வெளியீடான ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து, தற்போது ‘வேள்பாரி’ திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சூர்யா நடித்த கருப்பு படத்தில் அவரது வலுவான கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோன்ற வரலாற்று மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா சரியான தேர்வு என ஷங்கர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சூர்யா இந்த பிரம்மாண்ட திட்டத்தில் இணைவாரா என்பது குறித்து கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!