தென்னிந்திய திரைப்படத் துறையில், யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “சையாரா” திரைப்படம் அதிரடி வெற்றியைப் பெற்றுள்ளது. இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகிய இந்த படம், கடந்த ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் அஹான் பாண்டே மற்றும் அனித் பட்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் நடிப்பு, கதையின் உணர்ச்சிகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
முதல் நாளே அதிகளவான வசூலைப் பெற்றிருந்த இத்திரைப்படம் தற்பொழுது உலகளவில் 400 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெற்றி படக்குழுவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Listen News!