தெலுங்குத் திரையுலகில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் தனித்த இடம் பிடித்திருந்த பிஷ் வெங்கட் (வெங்கட் ராஜ்) இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 55. ஐதராபாத்தின் சந்தாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்றுவந்த அவர், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை தொடர்ச்சியாக மோசமடைந்ததால், இன்று காலையில் அவர் மறைந்தார்.
2001-ம் ஆண்டு வெளியான ‘குஷி’ திரைப்படம் மூலம் திரை உலகில் அறிமுகமான பிஷ் வெங்கட், அதன் பிறகு ‘கப்பர் சிங்’, ‘அதுர்ஸ்’, ‘ஆடி’, ‘டிஜே தில்லு’, ‘கைதி எண் 150’, ‘பன்னி’ உள்ளிட்ட பல படங்களில் பல்துறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். இவரது நேர்த்தியான வசனப் பயன்படுத்தல் மற்றும் தனிச்சிறப்பான நடிப்பு அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிர் ஊட்டியது.
அவரது மரணச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக ஊடகங்கள் வழியாக தனது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் என பலரும் அவரின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிஷ் வெங்கட் தனது நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். அவரது பங்களிப்பு, ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைக்கும்.அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Listen News!