• Feb 25 2025

இயக்குநர் கே. எஸ்.ரவிகுமாரையே மதிக்காத திரை பிரபலம் - வெளியான தகவல் இதோ!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் திரையுலக வாழ்க்கையில் உதவியாளராக இருக்கும் போது சந்திக்கும் சவால்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும் போது எந்த படமும் ரிலீஸ் ஆகாது, இல்லனா ஓடாது” என்று கலகலப்பாக கூறினார்.

அத்துடன் , உதவி இயக்குநர்கள் திரையுலகில் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் கதைத்துள்ளார்.அவர் அதில் கூறும் போது,  “அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும் போது யாருமே மதிக்க கூட மாட்டார்கள். ஆனா, ஒரு படம் ஹிட்டா ஆயிட்டா அப்புறம் எல்லாரும் பாராட்டுவாங்க” என்று அவர் தனது அனுபவத்தைக் கூறினார்.



கே.எஸ்.ரவிகுமார், தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். முத்து , படையப்பா , தசாவதாரம் மற்றும் நான் ஈ போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தனது அனுபவங்களை பகிர்ந்து பேசும் போது ரசிகர்கள் உற்சாகமாக கேட்டிருந்தனர்.

அவரது இந்த உரையாடல் திரையுலகில் நிலவும் வியாபார மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. அவரது இந்த பேச்சு உதவி இயக்குநர்கள் முதன்முதலில் பெரிய இயக்குநர்களின் கீழ் பணியாற்றும் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது வளர்ச்சி பாதை என்பவற்றை விளக்குகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் அவரது நகைச்சுவையான பேச்சை ரசித்துள்ளனர். மேலும் கே.எஸ்.ரவிகுமார் திரையுலகில் அதிக அனுபவம் பெற்ற இயக்குநராக இருப்பதால், அவரது வார்த்தைகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இன்னும் பல வெற்றிப் படங்களை இயக்கும் நோக்கில் இருக்கும் கே.எஸ்.ரவிகுமார், தமிழ் சினிமாவில் புதிய இயக்குநர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து வருவார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement