• Sep 05 2025

‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா...!விசாரணை எப்போது தெரியுமா?

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இசை மன்னர் இளையராஜா தனது இசைகள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தில், இளையராஜாவின் பழைய ஹிட் பாடல்களான "கன்னா லாடா கண்ணா" உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், இளையராஜா சார்பில் Chennai நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த பாடல்களுக்கு உரிமம் பெறாத நிலையில் அவை பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்ற பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் கவனம் பெறும் வழக்காக உருவெடுத்து வருகிறது. இனி இசையமைப்பாளர்களின் காப்புரிமை குறித்த விவகாரங்களில் இது முன்னுதாரணமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement