• Apr 17 2026

இதுல யாரு பன்னின்னு தெரியலையே..!! மூஞ்ச வச்சு அப்படியொரு போஸ்ட் கொடுத்த பிரபல நடிகை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கோ-2’,‘கலகலப்பு-2’, ‘சார்லி சாப்ளின்-2’உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பரீட்சையமான முகமாக மாறியவர் நடிகை நிக்கி கல்ராணி.

இவருக்கும் நடிகர் ஆதிக்கும் அண்மையில் தான்  திருமணம் நடைப்பெற்றது. இருவரும் சேர்ந்து 2 படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில், தாய்லாந்தில் உள்ள  ’கோ சாமூய்’ என்ற பன்றி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி.

அங்கு பன்றியுடன் அதேபோல முகத்தை வைத்து நிக்கி கொடுத்த போஸ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


அதாவது குறித்த பன்றியுடன் தானும் அதே போல முகத்தை வைத்துக்கொண்டு நிக்கி கொடுத்த போஸ், சட்டென பார்த்தால் இது நிக்கி தானா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளது.

இதில் யார் பன்றி என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement