• Jun 06 2025

இனியாவை தாறுமாறாக வெளுத்து வாங்கிய நிதீஷ்.! பயத்தில் கதிகலங்கி நிற்கும் இனியா..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, நிதீஷ் இனியாவைப் பாத்து ஆகாஷ் உன்ர Ex தானே என்று கேக்கிறார். அதைக் கேட்ட இனியா பயத்தில எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். இதனை அடுத்து ஆகாஷ் இதெல்லாம் எனக்கு எப்புடித் தெரியும் என்று ஜோசிக்கிறீயா என்கிறார். அதற்கும் இனியா எதுவுமே சொல்லாமல் நிற்கிறார். பின் நிதீஷ் அவன் கூட வெளியில எல்லாம் போயிருக்கியா என்று கேட்கிறார். அதைக் கேட்ட இனியா இல்ல பெருஷா ஒரு இடமும் போனதில்ல என்கிறார்.

இதனைத் தொடர்ந்து நிதீஷ் அவன் உண்மையிலேயே Ex தானா இல்லை என்றால் வேற ஏதாவது இருக்குதோ என்று கேட்கிறார். அதுக்கு இனியா நான் இப்பவெல்லாம் ஆகாஷ் கூட பேசுறதே இல்ல என்கிறார். அதனை அடுத்து நிதீஷ் எப்புடி இனியா பொய் எல்லாம் சொல்லுற நான் இப்ப வரும் போது கூட நீ அவன் கூட கதைச்சுக் கொண்டிருந்தியே என்கிறார். மேலும் இனி அவன் கூட பேசவே கூடாது என்று கோபமாகச் சொல்லுறார்.


மறுநாள் பாக்கியா இனியாவுக்கு போன் எடுத்து எப்புடி இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு இனியா நான் ரொம்பவே நல்லா இருக்கிறேன் என்று சொல்லுறார். பின் இனியா பாக்கியாவைப் பாத்து டாடி ஏதாவது சொன்னாரோ என்று கேட்கிறார் . அதுக்கு பாக்கியா இல்ல அவர் என்கிட்ட ஒன்னுமே சொல்லல என்கிறார். பின் இனியா கூட சுதாகர் வீட்ட இருந்தவங்க யாருமே கதைக்காமல் இருக்காங்க.

அதைப் பார்த்த இனியா இங்க என்னமோ நடந்திருக்கு நீங்க எல்லாரும் ஏன் என்கிட்ட மறைக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு சுதாகரின்ட மனைவி நீ நல்ல பிள்ளை என்று நினைத்தேன் ஆனால் கேள்விப்படுற விஷயம் எதுவுமே நல்லதாக தோணேல என்கிறார். அதுக்கு சுதாகர் சாப்பிடுற இடத்தில எதுவுமே கதைக்க வேணாம் பேசாம இரு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement