• Jun 07 2025

ஒரே படத்தில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, அரவிந்த்சாமி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடித்து வரும் 27 வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கார்த்தி நடித்த ’வா வாத்தியாரே’ என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளதால் அடுத்தடுத்து கார்த்திக்கின் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்தியின் 27 வது படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’மெய்யழகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். முதல் முறையாக சூர்யா, ஜோதிகா, கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய நால்வரும் ஒரே படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அரவிந்த்சாமி சைக்கிள் ஓட்ட அதில் பின்னாடி கார்த்தி சிரித்துக்கொண்டே உட்கார்ந்து இருக்கும் காட்சியை பார்க்கும் போது இது ஒரு ஜாலியான குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement