• Apr 18 2026

விஜயா மீது முத்துவுக்கு திடீரென வந்த சந்தேகம்.? உச்சகட்ட பயத்தில் ரோகிணி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  க்ரிஷை அழைத்து வருமாறு  மீனா சொன்னதாக ரோகிணி மனோஜிடம் சொல்லுகின்றார். ஆனாலும்  மனோஜ்,  அவன் இப்போ எல்லாம் ஓவர் அட்வான்டேஜ் எடுக்கிறான். அதனால் வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

எனினும் அதற்குப் பிறகு ரோகிணி உடம்பில் கல்யாணி வந்தால் சிக்கல் ஆகிவிடும் என்று ரோகிணியுடன் க்ரிஷை அழைத்து வரச் செல்லுகின்றார். 

அதே நேரத்தில், க்ரிஷின் ஸ்கூலுக்கு சென்ற பிஏ  கல்யாணி தான் தன்னை அனுப்பியதாக அவரின் புகைப்படத்தை காட்டி க்ரிஷை அழைத்துச் செல்கின்றார்.  அதற்கு பின்பு அங்கு போன ரோகிணி பையனை காணவில்லை என தேடுகின்றார். 


மீண்டும் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல, மனோஜ் விஜயாவும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனாலும் இதனை நீங்கள் தான் பண்ணி இருப்பீங்க என்று முத்து விஜயா மீது சந்தேகப்படுகின்றார். 

ஆனால் தான் இதனை பண்ணவில்லை என்று அண்ணாமலையின் கையை பிடித்து கெஞ்சுகின்றார் விஜயா.  இதன்போது ரோகிணிக்கு கால் பண்ணி தான் க்ரிஷை கடத்தி வந்ததாகவும், தனக்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் என்று மிரட்டுகின்றார் பிஏ. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement